Friday 3rd of May 2024 06:29:28 PM GMT

LANGUAGE - TAMIL
.
தொடரும் துயரம்: காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடிய மற்றொரு தாய் வவுனியாவில் உயிரிழப்பு!

தொடரும் துயரம்: காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடிய மற்றொரு தாய் வவுனியாவில் உயிரிழப்பு!


வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக இன்று மரணமடைந்துள்ளார்.

வவுனியா மறவன்குளம் பகுதியை சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி வயது 61 என்ற தாயே இன்றைய தினம் மரணமடைந்துள்ளார்.

இவரது மகன் தருமகுலநாதன் வயது 39 கடந்த 2000 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

அவரைத்தேடி வவுனியாவில் 1465 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை போராட்டத்திலும் குறித்த தாய் கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார்.

இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் இன்று மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE